கல்யாண களேபரம் – Part-1

மார்ச் 1, 2009 at 6:20 பிற்பகல் மறுமொழியவும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (Feb 22nd) வீராவோட தங்கை கல்யாணம் நடந்தது. அதுக்காக சனிக்கிழமயே நான் இங்க இருந்து தருமபுரிக்கு கிளம்பிட்டேன். Actualஆ நான் மதியான ரயில புடிச்சி போறதா தான் plan பண்ணினேன். Trainல போனாதான் receptionக்கு போய் சேர முடியும். அதோட saiயும் அந்த ரயில்ல தான் வர்றதா சொன்னான். ஆனா இந்த KP படுவா குட்டய ஒரு குழப்பு கொழப்பினான் பாருங்க…ஹய்யோ…

என்னிக்கும் இல்லாம அன்னிக்கின்னு பாத்தே 930 மணிக்கே நான் கிளம்பி ready ஆயிட்டேன். மதியம் 230 தான் ரயில் புறப்படும். அதனால் நிதானமா வேல பண்ணிட்டு இருந்தேன். 1030 மணிக்கு கிளம்பி ஒரு gold coin gift வாங்கிக்கிட்டு போலாம்னு இருந்தேன். அப்போ தான் இந்த KP phone பண்ணினான். பசங்க ஒரு ஆறு ஏழு பேர் வருவாங்கடா, அவங்களுக்கும் சேர்த்து ஒரு gift வாங்கிட்டு வந்துடு. இங்க வந்து amount share பண்ணிக்கலாம்னு சொன்னான். சரி, நண்பன் ஆசைப் பட்றானேனு அடயாறுல ஒரு gift shopக்குள்ள போனென். அழகா ஒரு modern architecture ஒண்ணு இருந்தது. அதயே வாங்கிருப்பேன், ஆனா சின்னதா ஒரு scratch இருந்ததால அத வாங்கல. வேறெதுவும் புடிக்காம Odysseyக்குள்ள போனேன். அதான் அன்னிக்கு பொழுதுக்கு நான் செஞ்ச ஒரு பெரிய தப்பு. வடிவேல் டயலாக் மாதிரி சொல்லணும்னா, ஒரு 2 மணி நேரமா முச்சு திணற திணற தேடினேன். இடைல KP “நீ ரொம்ப நல்லவன்டா”னு சொல்லி என்ன வித்தியாசமான giftஆ தேட சொன்னதுனால நேரம் போறதே தெரியாம தேடிட்டேன். :(

மணி 1அ தாண்டிடுச்சி. அப்பவே முடிவு பண்ணிட்டேன். Train miss.! அப்பறமா எதுத்தாப்ல இருக்குற நகைக்கடைக்கே போய் 2 தங்ககாசு எடுத்துட்டு ஊருக்கு கிளம்பிட்டேன். இருந்த அவசரத்துல அந்த கடையோட parkingல வண்டிய நிருத்தும் போது side stand போடாம வண்டிய விட்டு இறங்கி, வண்டி கீழ விழுந்து உஜாலா சொட்டு நீலம் மாதிரி 4 சொட்டு petrol கீழ சிந்திடிச்சு. (இதுக்காக KPகிட்ட இருந்து 4 ரூபா வசூல் பண்ணனும்னு நெனச்சேன், ஆனா மறந்துட்டேன்..! டேய் KP, 4 ரூபா ரெடியா வை. பெங்களூர் வந்ததும் வாங்கிக்குறேன்.)

அப்புறம் அப்டியே கிளம்பி கோயபேடு போய், ஒரு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸ புடிச்சு கிருஷ்ணகிரி வரைக்கும் டிக்கட் எடுத்துட்டு உக்காந்தேன். Full soundல சிவாஜி படம் ஆரம்பிச்சுது.  ஒரு பாதி படம் ஓடியிருக்கும், என்னோட செல்லுல ஒரு call வந்துச்சு.  சத்தம் சரியா கேக்காததனால ட்ரைவர் சீட்டு பக்கத்துல போய் நின்னு பேசிக்கிட்டு இருந்தேன். (Point to be noted..speaker சத்தத்த விட என்ஜின் சத்தமே கம்மியா இருந்துச்சு…!). நாலு லேன் பை-பாஸ் ரோட்ல median பக்கத்துல இருக்குற லேன்ல ட்ரைவர் வண்டி ஓட்டிகிட்டு இருந்தார். நடத்துனர்ட்ட ஏதோ பேசிக்கிட்டு வந்த அவர், வண்டி அந்த medianஅ நோக்கி போனத கவனிக்காம விட்டுட்டார். டயர் லைட்டா ஒரு சைடு உரசி ஒரு மாதிரி சத்தம் வந்தது. நான் அய்யோனு பதறிட்டேன். எப்டியோ தாறுமாறா ஒட ஆரம்பிச்ச வண்டிய தன்னோட கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துட்டார். 2 நொடி miss ஆயிருந்தா அன்னிக்கி எனக்கு சங்கு கூட ஊதிருப்பாய்ங்க. இது நடந்த உடனே அந்த conductor என்ன உள்ள பொய் உக்கார சொன்னார். எனக்கு அப்போ புரியல. ஆனா அதுக்கப்புறமா இன்னும் ரெண்டு தடவ அதே மாதிரி சத்தம் வந்து பஸ் கொஞ்சம் ஆட்டம் போட்டுது. அதுக்கப்புறமா தான் எனக்கு புரிஞ்சுது..! அஅண்டவா, என்ன காப்பாத்துப்பா.., பத்திரமா ஊரு போய் சேந்திட்டா KPக்கு பொது மாத்து போடறேன்னு வேண்டிக்கிட்டேன்.  ஒரு வழியா போக்கிரி படம் பாதி முடிஞ்சதுக்கபுறமா கிருஷ்ணகிரில இறக்கி விட்டாங்க. அப்பாடனு இருந்துச்சி. (Btw, போக்கிரி படம் எப்ப ஆரம்பிச்சதுன்னு கூட தெரியாது, அவ்ளோ பக்தி..! இல்ல பயம்..!!! இல்ல, ஒரு பயபக்தி’னு வச்சுக்கலாம்..!)

அங்க இருந்து ஒரு local பஸ்ஸ புடிச்சி தர்மபுரிக்கு போய் கல்யாண மண்டபத்துக்கு போனேன். நேரா KPய பாத்த உடனே, ஒரு அடி குடுக்கணும்னு பக்கத்துல போனா, என்ன பாத்த உடனே, “மச்சி, இங்க dinner கொஞ்சமா சாப்பிடு, நாம நைட்டு பரோட்டா சாப்பிட போலாம்”னு சொல்லி என் மனச மாத்திட்டான்!!!!!!!

நைட்டு 11மணிக்கு வீராவோட வீட்டுக்கு போனதுக்கபுறமா, 12 மணி போல, நானு, KP, முஜி மூணு பேரும் ஆட்டோ புடிச்சு பஸ்ஸ்டாண்டு வந்தோம்….பொரட்டா சாப்பிட….! :) அப்போதான் மனோகரனும் மதுரைல இருந்து வந்து சேந்தான். நாலு பேருமா சேந்தி 2 சந்து சுத்தி, பாத்த 3 தள்ளு வண்டிலயும் பரோட்டா இல்ல..முஜியும் மனோவும் தோசையே போதும்னு சைடு வாங்கிட்டாலும், நானும் KPயும் விடாம சுத்தி பக்கத்துல இருக்குற டவுண்பஸ்ஸ்டாண்டிக்கு வந்து அங்க ஒரு தண்ணு வண்டியில பரோட்டாவ புடிச்சிட்டோம்…!! கடை இருக்குற நிலைய பாத்துட்டு KPக்கு மனசு கேக்கல..”டேய், மொதல்ல ஒண்ணு வாங்கி ஆளுக்கு பாதி சாப்பிடலாம், நல்லா இருந்தா இன்னும் வாங்கிக்கலாம்”னு சொன்னான் (KP ரொம்ப hygienicனு எப்பயுமே படம் போடுவான்.) இத கேட்டுட்டு கடைக்காரன் ஒரு மாதிரி லுக்கு விட்டான். அப்பறம், நான் “நல்லா தான் இருக்கும், கவல படாத, உடம்புக்கு ஒண்ணும் ஆகாது”னு சொல்லி அவனுக்கு தெகிரியத்த (!!!) வரவழச்சு ஆளுக்கு ஒரு ப்ளேட் பரோட்டாவும் ஒரு முட்டையும் வாங்கி சாப்பிட்டோம்…!!! Midnightல பரோட்டா சாப்பிடற சுகமே தனிதான்! :)

அன்னிக்கு KP செஞ்ச ஒரே நல்ல காரியம், பரோட்டா சாப்பிட வந்ததுதான்..!

–to be continued…(களேபரம் தொடரும்..)

Entry filed under: பயணங்கள் முடிவதில்லை.... Tags: .

முதல் கடிதம்… கல்யாண களேபரம் – Part-2

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


நாள்காட்டி

மார்ச் 2009
தி செ பு வி வெ ஞா
« Dec   Apr »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Most Recent Posts


Follow

Get every new post delivered to your Inbox.